"எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு திட்டமிட்டபடி இந்தியாவுக்கு வழங்கப்படும்" -இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே உறுதி

0 2731
"எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு திட்டமிட்டபடி இந்தியாவுக்கு வழங்கப்படும்" -இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே உறுதி

ஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு ஏற்கனவே திட்டமிட்டபடி காலதாமதம் இன்றி இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் பேசிய இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடஷேவ், இருதரப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி குறித்த காலத்திற்குள் வெற்றிகரமாக வழங்கப்படும் என்றார்.

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 5 எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்க இந்தியா 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

முதல் எஸ் 400 ஏவுகணை அமைப்பு வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னதாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments